குடியாத்தம் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்!!


வேலூர்.ஏப்ரல்.12.,

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்துகொண்டே வரும் சூழலை கருத்தில் கொண்டு,

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகர செயலாளர் S.அனீஸ் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் பலருக்கும் வழங்கப்பட்டது.

இப்பணிகளோடு, இக்கொடிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வதில்லை என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்றும், மக்கள் அவசியமில்லாமல் கூட்டமாக கூடுவதை சுய கட்டுப்பாடுடன் தவிர்க்க வேண்டும், இவையனைத்தும் தான் தங்களை பாதுகாக்கும் என்பதை அவர்களுக்கு புரியும் விதமாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது..

இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முபாரக் அஹ்மத், குடியாத்தம் நகர துணை செயலாளர் கவுஸ் பாஷா, மருத்துவ அணி செயலாளர் சாதிக் மற்றும் சலிம் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்களை விநியோகித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
12.04.2021